திருநெல்வேலி பொருட்காட்சி திடலில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கான பந்தல் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இப்பணியினை கட்சியின் மாநில துணைத் தலைவர் ஆ. நாராயணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் ஏ.என். சுந்தரேசன், மாநில கலை இலக்கிய அணிச் செயலர் விவேகானந்தன், மாநில தொழிற்சங்கத் தலைவர் ஆர். சுதாகர்,தென்மண்டல செயலர் என். சுந்தர், மாநகர் மாவட்டச் செயலர் சுந்தர்ராஜ், கிழக்கு மாவட்டச் செயலர் லாரன்ஸ், மேற்கு மாவட்டச் செயலர் தங்கராஜ், தொகுதிச் செயலர்கள் எம்.கணேசன், வழக்குரைஞர் எஸ். கணேசன், மாவட்ட அவைத் தலைவர் பஷீர், மாவட்ட துணைச் செயலர் சரத்ஆனந்த், மாவட்ட இளைஞரணி செயலர் நட்சத்திரவெற்றி, மகளிரணி செயலர் ஷேசம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.