கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சாமி சிலையைக் கொண்டு சென்ற வாகனம் மரத்தில் மோதி விபத்து: ஒருவர் பலி

ஆந்திர மாநிலம் மல்லேஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள மல்லேஸ்வர சுவாமியை, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கே.திப்பனப்பள்ளி கிராமத்தில் உள்ளவர்கள் குல தெய்வமாகக் கொண்டு

News image
Updated On :18 பிப்ரவரி 2014, 10:17 am

ரவி

ஆந்திர மாநிலம் மல்லேஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள மல்லேஸ்வர சுவாமியை, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கே.திப்பனப்பள்ளி கிராமத்தில் உள்ளவர்கள் குல தெய்வமாகக் கொண்டு வழிபட்டு வருகின்றார்கள்.  இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் மல்லேஸ்வர சுவாமி சிலையினை ஊருக்குக் கொண்டு வந்து பூஜை செய்தனர். இன்று சரக்கு வாகனத்தில் அந்த  சிலையைக் கொண்டு செல்லும் போது, வேப்பனப்பள்ளி அருகே அத்திகுந்தா பகுதியில் அந்த வாகனம் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், பக்தர் சின்னச்சாமி (62) என்பவர் பலியானார். மேலும் பக்தர்கள் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.