நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பணம் பறித்ததாக இரு வடமாநில மாணவர்கள் கைது

சிதம்பரத்தில் மெக்கானிக்கிடம் பணம் பறித்ததாக அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் பயிலும் வடமாநிலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :18 பிப்ரவரி 2014, 4:39 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் மெக்கானிக்கிடம் பணம் பறித்ததாக அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் பயிலும் வடமாநிலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பீகாரைச் சேர்ந்த பிரியரஞ்சன் பிரியதர்சி (23) சிதம்பரம் கோவிந்தசாமித்தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி அண்ணாமலைப் பல்கலையில் 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். அதேபோன்று பீகாரைச் சேர்ந்த சங்கர் முருமோ (23) டைமண்ட் ஜூப்ளி விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயின்று வருகிறார்.

இருவரும் தனது மோட்டார் சைக்கிளை அண்ணாமலைநகர் சிவபுரி மெயின்ரோட்டில் உள்ள முரளி என்பவரது மெக்கானிக் ஷாப்பில் பழுதுபார்க்க விட்டனர்.

பின்னர் சரியாக பழுது பார்க்கவில்லை எனக்கூறி மெக்கானிக் முரளியை தாக்கி, அவரது சட்டை பையைலிருந்த ரூ.100 தொகையை பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து இரு மாணவர்களையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.