கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு விடுதலை: தமிழக அரசின் முடிவுக்கு தொ.திருமாவளவன் நன்றி

ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட  3 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது.

News image
Updated On :19 பிப்ரவரி 2014, 5:46 am

ரவி

ராஜிவ் காந்தி  கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட  3 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் நேற்று ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இந்நிலையில் இன்று அவர்களையும் மேலும் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 4 பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு தொல். திருமாவளவன் வரவேறு தெரிவித்துள்ளதோடு தமிழக அரசுக்கு நன்றியும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் அளித்த பேட்டியின் போது

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தேமுதிகவும் இணையும் எனறு நம்புகிறோம். சேது சமுத்திர திட்டம், மதவாத கொள்கைக்கு எதிரிப்பு உள்ளிட்ட வற்றில் காங்கிரஸ் திமுக விடுதலை சிறுத்தை ஆகிய கட்சியில் ஒருமித்த கருத்து கொண்டிருக்கிறது. இந்த கூட்டணியில் தேமுதிகவும் இணைந்து கொண்டால் மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.