இதுகுறித்து வியாழக்கிழமை நடைபெற்ற நாட்டியாஞ்சலி தொடக்கவிழாவில் அவர் பேசியது: டாக்டர் கபிலா வாத்ஸ்யாயன், டாக்டர் ஆர்.நாகசாமி, மற்றும் சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த சமூகக் கலை உணர்வுடைய ஆர்வலர்கள் ஒரு குழுவாக அமைத்து 1981-ம் ஆண்டில் இந்த நாட்டியாஞ்சலி விழாவை தொடங்கப்பட்டது. தற்போது புதுதில்லி சங்கீதநாடக அகாதமி, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளிட்ட பலரது உதவியோடு 32 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில் 1600-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாட்டியம் ஆடியுள்ளனர்.