இதன்படி, கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்ஸி., மற்றும் பட்டயச் சான்றிதழ் படிப்புகளில் மின்னணு மூலம் அறிதல் (இ-லேர்னிங்) , மின்னணு மூலம் பதிவாக்குதல் (இ-பப்ளினிங்) போன்ற துறைகள் தொடங்கப்படும். இதற்கான பாடத்திட்டத்தை தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப சி.ஐ.ஐ. கூட்டமைப்பு வழி வகுத்துத் தரும். மேலும் இந்தத் துறையில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படும்.அப்போது பேசிய, அடோப் சிஸ்டம் நிறுவனத்தின் மேலாளர் திர்டிப் ராய் சவுத்திரி, கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த பாடங்களை எளிதில் கற்றுக் கொள்ளவும், பயிற்சி மேற்கொள்ளவும், வேலைவாய்ப்பு பெறுவதற்கும் அடோப் சிஸ்டம் நிறுவனம் உறுதுணையாக இருக்கும் என்றார்.