கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோழிப் பண்ணையில் தீ விபத்து : 4 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் பலி

கிருஷ்ணகிரி அருகே பெரியமத்தாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் இன்று காலை நேரிட்ட தீ விபத்தில் 4 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் பலியாயின.

News image
Updated On :16 ஜனவரி 2014, 4:49 am

ரவி

கிருஷ்ணகிரி அருகே பெரியமத்தாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் இன்று காலை நேரிட்ட தீ விபத்தில் 4 ஆயிரம் கோழிக் குஞ்சுகள் பலியாயின.

கடந்த 10 ஆண்டுகளாக கோழிப் பண்ணை நடத்தி வருபவர் ராமன். இவர் நேற்று தனது கோழிப் பண்ணைக்காக 4 ஆயிரம் கோழிக் குஞ்சுகளை வாங்கி வந்து கூண்டுகளில் அடைத்து வைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை திடீரென கோழிப் பண்ணையில் தீ விபத்து நேரிட்டது. இதில், பண்ணை முழுவதும் எரிந்து, அனைத்து கோழிக் குஞ்சுகளும் பலியாகிவிட்டன.

கோழிக் குஞ்சுகளுக்கு குளிர் தாக்காமல் இருக்க கதகதப்பு ஏற்படுத்த பண்ணையில் நெருப்பு மூட்டும் போது இந்த தீ விபத்து நேரிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தகவல் அறிந்ததும் பருகூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.