வாக்காளர் தினம் : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மனித சங்கிலி
திருவண்ணாமலையில் தேசிய வாக்காளர் தினம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 14 கி.மீ. தூரத்துக்கு கிரிவலப்பாதையில் மனித சங்கலி துவங்கியுள்ளது.


திருவண்ணாமலையில் தேசிய வாக்காளர் தினம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 14 கி.மீ. தூரத்துக்கு கிரிவலப்பாதையில் மனித சங்கலி துவங்கியுள்ளது.
அருணாச்சலேஸ்வரர் மலையை சுற்றி வரும் பௌர்ணமி கிரிவலம் 14 கி.மீ. தூரம் ஆகும். கிரிவலப்பாதையில் நடக்கும் இந்த மனித சங்கிலியை மாவட்ட ஆட்சியர் ஆ. ஞானசேகரன் துவக்கி வைத்தார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சா. வளர்மதி, கோட்டாட்சியர் கே. முத்துக்குமாரசாமி, வட்டாட்சியர் வேடியப்பன், அரசுத் துறை அதிகாரிகள் பள்ளி, மாணவ, மாணவியர்கள், தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
இதே போல, வாக்காளர் விழிப்புணர்வை வலியுறுத்தி நாளை காலை 9 மணிக்கு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இருந்து வேலூர் சாலையில் உள்ள அண்ணா நுழைவு வாயில் வரையில் தொடர் ஓட்டம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...