ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல்லை மாவட்டத்தில் 1.07 லட்சம் புதிய வாக்காளர்கள்: 1302 மையங்களில் வாக்காளர் அட்டை விநியோகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 32 புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும்

News image
Updated On :25 ஜனவரி 2014, 9:49 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 32 புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி 1302 மையங்களில் சனிக்கிழமை தொடங்கியது. புதிய வாக்காளர்கள் தங்களது  வாக்காளர் அட்டையினை ஆர்வமுடன் பெற்று சென்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ராதாபுரம், நான்குனேரி, ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 10 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த 10 பேரவைத் தொகுதிகளில் ஆண்கள் 11 லட்சத்து 52 ஆயிரத்து 944 பேரும், பெண்கள் 11 லட்சத்து 60 ஆயிரத்து 613 பேரும், மற்றவர்கள் 12 பேரும் ஆக மொத்தம் 23 லட்சத்து 13 ஆயிரத்து 569 வாக்காளர்கள் உள்ளனர்.

01.01.2014 அன்று 18 வயதை பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. முகாமில் இம்மாவட்டத்தில் புதிய வாக்காளராக விண்ணப்பம் செய்தவர்களில் தகுதியான 1,07,032 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியினை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை தொடங்கியது.

இம்மாவட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2707 வாக்குசாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1302 மையங்களில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது. புதிய வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்து தேர்தல் ஆணையம் வழங்கிய வாக்காளர் அடையாள அட்டையினை ஆர்வமுடன் பெற்று சென்றனர்.

புதிய வாக்காளர்கள் வரும் பிப். 5 ம் தேதி வரை தங்களது வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.