தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கங்கையில் அடித்து செல்லப்பட்ட 14 பேர் கதி என்ன? பீகாரில் சோகம்

பீகார் மாநிலம் சவுசா மண்டலம் நயாசிபுர் கிராமத்தை சேர்ந்த 22 பேர், காசியாபுர் மாவட்டத்தில் உள்ள பலியா என்ற கிராமத்தில் விவசாய வேலை பார்ப்பதற்காக நேற்று கங்கை

News image
Updated On :29 ஜனவரி 2014, 9:56 am

வேல்முருகன்

பீகார் மாநிலம் சவுசா மண்டலம் நயாசிபுர் கிராமத்தை சேர்ந்த 22 பேர், காசியாபுர் மாவட்டத்தில் உள்ள பலியா என்ற கிராமத்தில் விவசாய வேலை பார்ப்பதற்காக நேற்று கங்கை நதியில் படகில்  சென்றனர்.  10 பேர் மட்டுமே செல்லக்கூடிய  படகில் 22 பேரும் சென்றனர் 

சவுசாபசார் அருகே சென்று கொண்டிருந்த போது பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. இதில் 8 பேர் மட்டும் நீச்சல் அடித்து கரைக்கு வந்து சேர்ந்தனர். மீதமுள்ள 14 பேரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.

 தகவல் அறிந்த போலீஸார் மற்றும்  தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலை வரை ஒருவரது உடல் கூட கிடைக்கவில்லை.இது குறித்து பேசிய போலீஸார்  உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றனர். நீரில் மூழ்கிய 14 பேரில் பெரும்பாலோனோர் பெண்கள் மற்றும குழந்தைகள் ஆவர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.