தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணப்பாறை அருகே சொத்து தகராறில் அண்ணனை வெட்டி கொன்றார் தம்பி

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வேங்குடியை சேர்ந்த கந்தசாமியின் மகன் கருப்பன் வயது 55 இவரது தம்பி சின்னதுரை வயது 50 உடையாப்பட்டியில் வசித்துவந்தார்.

News image
Updated On :7 ஜூலை 2014, 5:25 am

கவியழகன்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வேங்குடியை சேர்ந்த கந்தசாமியின் மகன் கருப்பன் வயது 55 இவரது தம்பி சின்னதுரை வயது 50 உடையாப்பட்டியில் வசித்துவந்தார்.

இருவருக்கும் இடையே வெகு நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் கருப்பன் வீட்டு மரத்தை சின்னதுரை வெட்டியதாக இருவருக்கும் மீண்டும் சண்டை நடந்துள்ளது. இதையடுத்து நேற்று நள்ளிரவில் வீட்டின் வாசலில் தூங்கி கொண்டிருந்த கருப்பனை தம்பி சின்னதுரை தனது ஆதரவாளர்களுடன் சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து மணப்பாறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.