மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சைக்கிள் மீது மோட்டார் பைக் மோதல்: ஒருவர் சாவு- 2 பேர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்த மக்பூல் மகன் ஜாகீர்உசேன்(34) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த கொளஞ்சி மகன் செந்தில்குமார்(29) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து ஒரு மோட்டார்

News image
Updated On :10 ஜூலை 2014, 11:26 am

சீனிவாசன்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் பைக்மீது, சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்த மக்பூல் மகன் ஜாகீர்உசேன்(34) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த கொளஞ்சி மகன் செந்தில்குமார்(29) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து ஒரு மோட்டார் பைக்கில் திருச்சி நோக்கி வந்தனர். வரும் வழியில் உளுந்தூர்பேட்டை அருகே வண்டிப்பாளையம் என்ற இடம் வரும்போது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்த சைக்கிள் மீது பைக் மோதியது. இதில் ஜாகீர்உசேன், செந்தில்குமார், சைக்களில் வந்த வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த மூவரையும் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். அதில் சிகிச்சை பலனின்றி ஜாகீர் உசேன் புதன்கிழமை உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செந்தில்குமார், ராமச்சந்திரன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருநாவலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.