வீட்டில் பதுக்கிய 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

குமரி மாவட்ட பறக்கும்படை தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஊழியர் ஜான்பிரைட் ஆகியோர் வியாழக்கிழமை அதிகாலையில் நித்திரவிளை அருகேயுள்ள சின்னத்துறை கடற்கரைப் பகுதியில்
Updated on
1 min read

நித்திரவிளை அருகே கடற்கரை கிராமத்தில் பாழடைந்த வீட்டின் பின் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 750 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும்படை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

குமரி மாவட்ட பறக்கும்படை தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர் செய்யதுஅலி, ஊழியர் ஜான்பிரைட் ஆகியோர் வியாழக்கிழமை அதிகாலையில் நித்திரவிளை அருகேயுள்ள சின்னத்துறை கடற்கரைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  அப்பகுதியில் உள்ள ஒரு பழுதடைந்த வீட்டின் பின்னால் சாக்கு மூட்டைகள் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டிருந்தது தெரிந்தது.இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று பார்த்த போது, கேரளத்துக்கு கடத்துவதற்காக சாக்கு மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்த 750 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com