நெல்லையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவம் இறுதியாண்டு மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும்


திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பயிற்சி மருத்துவர்கள், வியாழக்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவம் இறுதியாண்டு மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 170 பயிற்சி மருத்துவர்களும் கோரிக்கை அட்டை அணிந்தபடி இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் 3500-க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறோம். மருத்துவம் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கான உதவித்தொகையை ரூ.20 ஆயிரமாகவும், முதுநிலை மருத்துவம், பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு முறையே ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் வழங்கக்கோரி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். அதன்படி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளோம்.
தில்லி, உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழக அரசு வழங்கி வரும் உதவித்தொகை மிகவும் குறைவானதாகும். ஆனால், தமிழகத்தில் தாய்-சேய் இறப்பு விகிதம் உள்ளிட்டவை குறைந்து சுகாதாரத்தில் மேம்பட்ட நிலை ஏற்பட்டு வருகிறது.இதுதவிர விடுமுறையே எடுக்காமல் மாதம் முழுவதும் பணியாற்றி வரும் பயிற்சி மருத்துவர்களுக்கு உடனடியாக ஊதவித் தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
சித்த மருத்துவக் கல்லூரி: இதேபோல பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியிலும் பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் தங்களது உதவித் தொகையை உயர்த்தக் கோரி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...