தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரத்தில் மீட்கப்பட்ட சிறுமியின் தாயார் மாயம்: போலீஸார் வழக்குப் பதிவு

சிதம்பரம் கோயிலில் மீட்கப்பட்ட 4 வயது சிறுமியின் தாயார் முத்துலட்சுமியை காணவில்லை என சோழத்தரம் காவல் நிலையத்தில் அவரது மாமனார் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து

News image
Updated On :20 ஜூலை 2014, 12:55 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் கோயிலில் மீட்கப்பட்ட 4 வயது சிறுமியின் தாயார் முத்துலட்சுமியை காணவில்லை என சோழத்தரம் காவல் நிலையத்தில் அவரது மாமனார் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து முத்துலட்சுமியை தேடி வருகின்றனர்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தெற்கு கோபுர வாயில் பகுதியில் சனிக்கிழமை மாலை 4 வயது சிறுமி தனியாக நின்று அழுது கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அச்சிறுமியை சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் கொண்டு வந்து ஒப்படைத்தார். குழந்தையிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கருணாகரநல்லூரைச் சேர்ந்த சந்திரசேகரன் மகள் மீனா (4) என்றும், சந்திரசேகரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதும், தாய் முத்துலட்சுமியுடன் கோயிலுக்கு வந்ததும் தெரியவந்தது.

மேலும் சிதம்பரம் நகர போலீஸார் கருணாகரநல்லூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டியிருப்பது தெரியவந்தது, அச்சிறுமியை அவரது தாத்தா ராசப்பா மற்றும் ஊராட்சி மன்றத் தலைவரிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீஸார் சிறுமியின் தாயார் முத்துலட்சுமியை செல்போனில் தொடர்பு கொண்ட போது ஸ்விச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து தனது மருமகள் முத்துலட்சுமி (23) காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள காட்டுக்கொள்ளை கிராமத்திற்கு கருமக்காரியத்திற்கு 8 பவுன் இரு செயின்கள், மோதிரம், கொலுசு உள்ளிட்ட நகைகள் மற்றும் குழந்தை மீனா (4) ஆகியோருடன் சனிக்கிழமை காலை சென்றவர் காணவில்லை என கணவர் சந்திரசேகரன் தந்தை ராசப்பன் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள சோழத்தரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து குழந்தையை சிதம்பரம் கோயிலில் தனியாக பரிதவிக்க விட்டு, மாயமான தாயார் முத்துலட்சுமியை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.