இதனையடுத்து தனது மருமகள் முத்துலட்சுமி (23) காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள காட்டுக்கொள்ளை கிராமத்திற்கு கருமக்காரியத்திற்கு 8 பவுன் இரு செயின்கள், மோதிரம், கொலுசு உள்ளிட்ட நகைகள் மற்றும் குழந்தை மீனா (4) ஆகியோருடன் சனிக்கிழமை காலை சென்றவர் காணவில்லை என கணவர் சந்திரசேகரன் தந்தை ராசப்பன் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள சோழத்தரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து குழந்தையை சிதம்பரம் கோயிலில் தனியாக பரிதவிக்க விட்டு, மாயமான தாயார் முத்துலட்சுமியை தேடி வருகின்றனர்.