கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு ஆரம்பாக்கம், ஏடூர், கும்புளி போன்ற பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் 12 ஆம் வகுப்பு வரை படிக்க செல்கின்றனர்.இந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் காலை நேரத்திலும், பள்ளி முடிந்ததும் வீடு திரும்ப மாலை நேரத்திலும் உரிய பேருந்து வசதி இல்லாததால் இவர்கள் ஆட்டோக்களில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக ஏடூர், கும்புளி போன்ற பகுதிகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு தனியார் பேருந்து வசதி கூட இல்லை. எனவே இவர்கள் ஆட்டோக்களில் தினமும் 20 ரூபாய் கொடுத்து பள்ளிக்கு வந்து போகின்றனர்.