பின்னர் எம்.எல்.ஏ. பொன்னுப்பாண்டியன் பேசுகையில், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. இது விஷயத்தில் சுமார் 10 ஆண்டுகள் பின்தங்கியுள்ளோம். நகரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டும் புதியதாக ஒரு பேருந்து நிலையம் அவசியமாக உள்ளது. இது குறித்து பல முறை அரசு உயர் அதிகாரிகளையும், சம்பந்தப்பட்ட அமைச்சரையும் நேரில் சந்தித்து முறையிட்டுள்ளேன். நகராட்சியின் தீர்மானம் கேட்கிறார்கள். நகராட்சி நிர்வாகம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு பயனுள்ள இடத்தைத் தேர்வு செய்து கொடுத்தால், அரசிடம் நிதி பெற்று புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.