இந்த நிலையில் கோபாலசமுத்திரம் தெற்கூரில் சிறப்புத் தீர்வின் அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி அமைத்து மாணவர்களின் கல்வியைப் பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.இதைக்கண்டித்து திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தெற்கூர் மக்கள் வகுப்பறை போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். கரும்பலகையுடன் வந்த மாணவர்-மாணவிகள், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களைப் பயின்றனர். அவர்களுடன் ஊர்த் தலைவர் உ.வேலாயுதபெருமாள், மனிதஉரிமைகள் களம் அமைப்பின் நிர்வாகி பரதன் உள்பட மாணவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.