சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை மாலை கழுத்து அறுபட்ட நிலையில் ரெளடி மண்ரோடு ஹரி (36) என்பவர் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கொலை செய்யப்பட்டாரா? என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் சிவபுரி மெயின்ரோட்டு பகுதியில் உள்ள மண்ரோட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஹரி (36). பிரபல ரெளடியான இவர் வெள்ளிக்கிழமை மாலை அவரது வீட்டின் வெளி வராண்டாவில் கழுத்து அறுபட்ட நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து போன ஹரி மீது அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. ஹரியின் மனைவி மதுமிதா (30) கடந்த 2 மாதம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இவருக்கு கேஷிகா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளார். மறைந்த பிரபல ரெளடி மண்ரோடு சந்திரனின் தம்பியாவார் ஹரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

திருப்பத்தூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!

வண்ணாந்துறை கானாறு கரைக்கு தடுப்புச் சுவா்: திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

