பொன்னேரி பகுதியில் கடந்த 2மாதமாக கடும் வெயிலுடன் பொதுமக்களை வெப்பம் வாட்டி வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பொன்னேரி பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்பகுதியில் கத்திரி முடிந்தும் கடும் வெப்பத்துடன் வெயில் அடித்தது.
இந்நிலையில் அப்பகுதியில் திடீரென இடி, மின்னல் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட மரங்களின் கிளைகள் ஒடிந்து விழுந்தன. போக்குவரத்து பாதிப்பு... அதே போன்று பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக பொன்னேரி-பழவேற்காடு நெடுஞ்சாலையில் உள்ள பரிக்கப்பட்டு கிராமத்தில் மரம் ஒடிந்து சாலையில் விழுந்தது. சாலையில் விழுந்த மரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர்.
இதனால் பொன்னேரியில் இருந்து பழவேற்காடுக்கு 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மின் கம்பங்கள் கீழே விழுந்தன... மழை காரணமாக ஒரு சில இடங்களில் மின் கம்பங்கள் ஒடிந்து கீழே விழுந்தன. 15மணி நேர மின்தடை.... பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததன் காரணமாக பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 15மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

