திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் தெப்பத்திருவிழா

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகிஅம்பாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா 2ம்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வந்தது
திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் தெப்பத்திருவிழா
Updated on
1 min read

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகிஅம்பாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா 2ம்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வந்தது

இதில் 10ம் நாள் திருவிழாவில் முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா மிகச்சிறப்பாக புதன்கிழமை இரவு நடைபெற்றது

நாதஸ்வர கச்சேரியுடன் சாமி வீதியுலா புறப்பட்டு வானவேடிக்கையுடன் தெப்பத்தில் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகிஅம்பாள் சாமிகள் இறக்கிவைக்கப்பட்டு தேவாரங்கள் பாடி அதன் தொடர்ச்சியாக மஹா தீபஆராதனை காட்டப்பட்டு தெப்பம் குளத்துகரைiயில் இருந்து மூன்று சுற்றுகளாக வலம் வந்தது

நிகழ்ச்சியில் புதுக்கோட்டை கைக்குறிச்சி குளவாய்ப்பட்டி வாண்டாக்கோட்டை ஆலங்குடி வேப்பங்குடி தோப்புக்கொல்லை மாங்கனாம்பட்டி போன்ற பல்வேறு ஊர்களில் இருந்து பல்லாயிரக்கனக்கான பொதுமக்கள் பக்தக்கோடிகள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com