6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருநெல்வேலி அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை

மானூர் அருகே உள்ள வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த சேது மகன் இசக்கிமுத்து (45). அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர், ராமையன்பட்டி ஊராட்சியின் 4-வது வார்டு உறுப்பினராக இருந்தார். இவர், தனது மனைவி

News image
Updated On :16 ஜூன் 2014, 12:41 pm

முத்துகுமார்

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே மர்மநபர்களால் அரிவாளால் ஞாயிற்றுக்கிழமை வெட்டப்பட்ட அ.தி.மு.க. கவுன்சிலர் திங்கள்கிழமை அதிகாலையில் உயிரிழந்தார்.

மானூர் அருகே உள்ள வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த சேது மகன் இசக்கிமுத்து (45). அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர், ராமையன்பட்டி ஊராட்சியின் 4-வது வார்டு உறுப்பினராக இருந்தார். இவர், தனது மனைவி சொர்ணமணியுடன் (40) பைக்கில் சிவாஜிநகர் பகுதியில் ஞாயி்ற்றுக்கிழமை சென்றபோது அரிவாளால் வெட்டப்பட்டார். தடுக்கமுயன்ற சொர்ணமணிக்கும் அரிவாள்வெட்டு விழுந்தது. காயமடைந்த இருவரையும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு திங்கள்கிழமை அதிகாலையில் இசக்கிமுத்து இறந்தார். இதுகுறித்து மானூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

இவ் வழக்கு தொடர்பாக 6 பேரை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.