நெல்லை மாநகராட்சி ஆணையர் அறையில் தீ விபத்து: ரூ.5 லட்சம் பொருள்கள் சேதம்
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் அறையில் வியாழக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமாகின. கோப்புகள் தீயில் எரியாமல் அதிர்ஷ்டவசமாக


திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் அறையில் வியாழக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமாகின. கோப்புகள் தீயில் எரியாமல் அதிர்ஷ்டவசமாக தப்பின.
திருநெல்வேலி நகரத்தில் சுமாமி நெல்லையப்பர் சாலையில் மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இதன் தரைத்தளத்தில் மாநகராட்சி மேயர், ஆணையர், செயற்பொறியாளர், சிறுகூட்ட அரங்குகள் உள்ளன. மாநகராட்சி ஆணையர் அர.லட்சுமி, வியாழக்கிழமை காலையில் இருந்து பிற்பகல் 2.30 மணி வரை அறையில் இருந்துள்ளார். அதன்பின்பு உணவு இடைவேளைக்காக புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அந்த அறையில் இருந்து கரும்புகை வெளியேறியதாம். இதையடுத்து அறை முழுவதும் பரவிய தீயை மாநகராட்சி பணியாளர்களும் பொதுமக்களும் அணைக்க முயன்றனர். மாநகராட்சி செயற்பொறியாளர்கள் நாராயணன்நாயர், உதவி ஆணையர் கருப்பசாமி உள்ளிட்டோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் கோப்புகளையும், பொருள்களையும் அப்புறப்படுத்தினர். தகவலறிந்ததும் பேட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் மாநகராட்சி ஆணையர் அறையில் இருந்த கணினி, பிரிண்டர், நாற்காலிகள், மேஜை உள்ளிட்ட சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமானதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...