கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்குப் பதிவு

காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி(40). இவரது மனைவி வசந்தி (30). கூலித் தொழிலாளியான சின்னதம்பி, சனிக்கிழமை பணிக்கு செல்லவில்லையாம்.

News image
Updated On :29 ஜூன் 2014, 10:57 am

ரவி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே மனைவியைத் தாக்கிய கணவன் மீது போலீஸôர் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனர்.

காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி(40). இவரது மனைவி வசந்தி (30). கூலித் தொழிலாளியான சின்னதம்பி, சனிக்கிழமை பணிக்கு செல்லவில்லையாம். இதுகுறித்து மனைவி வசந்தி, கணவன் சின்னதம்பியிடம் கேட்டாராம். இதனால் தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டத்தில் ஆத்திரமடைந்த சின்னதம்பி, வசந்தியைத் தாக்கினாராம். இதில் பலத்த காயம் அடைந்த வசந்தியை அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் மீட்டு, காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வசந்தி அளித்த புகாரின் பேரில், காவேரிப்பட்டணம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.