காமராஜருக்கு பிறகு ஜி.கே.மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் தலைவர்களாக உருவெடுத்து, தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து, அனைத்து ஜாதியினருக்கும் பொறுப்பு கொடுத்து பாகுபாடற்ற நிலையில் கட்சியை வளர்த்தார்கள். அவர்கள் மறைந்த பிறகு ஜி.கே.வாசன் 2001-ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை, இந்திய தேசிய காங்கிரஸோடு இணைத்து கொண்டார். அவரால் கட்சிக்கு எந்த பயனும் இல்லை. மூத்த தலைவர்கள் ராமசாமிபடையாச்சியார், மாணிக்கவேலு நாயக்கர், வாழப்பாடி ராமமூர்த்தி, எம்.பி.சுப்பிரமணியம், திண்டிவனம் ராமமூர்த்தி, எம்.கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குமரிஅனந்தன் ஆகியோர் கட்சி வளர்ச்சிக்காக பாடுபட்டனர்.