மற்றொரு துண்டு பிரசுரத்தில் 1987 ஜூலை 30-ம் தேதி இலங்கையில், ராஜீவ்காந்தியை துப்பாக்கி கட்டையால், சிங்களராணுவ வீரர் தாக்கிய படத்தினையும், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் 7 பேரை தமிழக அமைச்சரவை முடிவு செய்யப்பட்டடது குறித்தும் வெளியிட்டுள்ளார். அதில் ராஜீவ்காந்தியை கொலை செய்ய துணிந்தவர் இலங்கையில் சுதந்திர பறவை. ஆனால் இங்கு செய்யாத குற்றத்திற்கு தூக்குத்தண்டனை, 23 வருட சிறை. இதுதான் இந்தியாவின் இறையாண்மையா? இதுதான் தேசத்தின் விவகாரமா?, இதுதான் நீதியா? என பிரசுரித்துள்ளார்.