அரசு மருத்துவக்கல்லுரி, மகளிர் கல்லூரி: சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் அரசு மருத்துவக்கல்லூரியும், சிதம்பரம் நகரில் மகளிர் கல்லூரியும், சி.முட்லூரில் சென்ட் தொழிற்சாலையும், ஜெயங்கொண்டத்தில் பருத்தி கொள்முதல் நிலையமும் தொடங்க வேண்டும், ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்கள் தூர் வார வேண்டும், புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே பாலம் பழுதடைந்துள்ளதால், புதிய பாலம் கட்ட வேண்டும் என்பதே தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாகும். இக்கோரிக்கைகள் குறித்த தமிழக முதல்வர் திட்டங்களை அறிவிப்பார் என பொதுமக்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்