நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரம் மோட்டார் தொழிலாளர் சங்கத் தேர்தல்: கள்ள ஓட்டு போடச்சென்றவரை தடுத்துவருக்கு அடி-உதை

தேர்தல் அதிகாரி ராதா முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தற்போது தலைவராக உள்ள ராஜேந்திரன் தலைமையில் ஒரு அணியும், கே.பி.ராஜா தலைமையில் ஒரு அணியும், சுந்தரவேல்

News image
Updated On :30 மார்ச் 2014, 1:22 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் சிதம்பரம் மோட்டார் தொழிலாளர் சங்கத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கள்ளஓட்டு போடச்சென்றவரை தடுத்த நடத்துநர் தாக்கப்பட்டார்.

தேர்தல் அதிகாரி ராதா முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் தற்போது தலைவராக உள்ள ராஜேந்திரன் தலைமையில் ஒரு அணியும், கே.பி.ராஜா தலைமையில் ஒரு அணியும், சுந்தரவேல் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டது. மொத்தம் 711 பேர் வாக்காளர்கள். 631 பேர் வாக்களித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை தேர்தல் தொடங்கியதும், அடையாள அட்டை இல்லாதவர் கள்ள ஓட்டு போடச்சென்றதாகவும், அவரை தடுத்த தனியார் பஸ் நடத்துநர் ராஜேஷ் (26) என்பவர் தாக்கப்பட்டதாக தெரிகிறது. காயமடைந்த அவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.