ஜி.பூராசாமி கடந்த சனிக்கிழமை சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியனை அவரது இல்லத்தில் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு கோரி கடிதம் அளித்தார். அப்போது 1986-ம் ஆண்டு சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் தேர்தலில் போட்டியிட இந்திய கம்யூ கட்சியின் அங்கீகரிக்கபப்ட்ட சின்னமான கதிர், அரிவாள் சின்னத்தை வழங்கியதை குறிப்பிட்டு ஆதரவு கேட்டார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜனையும், அவரது இல்லத்தில் சந்தித்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் தனது ஆதரவு கேட்டு ஜி.பூராசாமி கடிதம் அளித்துள்ளார்.