அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வெற்றியைக் கொண்டாட ஏற்காடு சென்ற பிளஸ்-2 மாணவர் விபத்தில் சாவு

பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றதைக் கொண்டாட ஏற்காட்டுக்கு நண்பர்களுடன் சென்ற மாணவன், செவ்வாய்க்கிழமை நேரிட்ட விபத்தில் சிக்கி பரிதாபமாக

News image
Updated On :13 மே 2014, 2:43 pm

தங்கராஜா

பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்றதைக் கொண்டாட ஏற்காட்டுக்கு நண்பர்களுடன் சென்ற மாணவன், செவ்வாய்க்கிழமை நேரிட்ட விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

ஈரோடு மாநகரம் கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது மகன் தேவராஜ் (18). பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்த தேவராஜ், அதில் வெற்றி பெற்றிருந்தார். இதையடுத்து அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக தேவராஜ் தனது நண்பர்களுடன் சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்குச் செல்ல முடிவு செய்தார்.

 இதையடுத்து அவரது நண்பர்கள் பூபதி (21), அஜீத் (18), தருமன் (17) ஆகியோருடன் இரு பைக்குகளில் தேவராஜ் செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டார். நால்வரும் சேலம் கந்தம்பட்டி புறவழிச் சாலை பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.

 அப்போது தேவராஜ் - பூபதி வந்த பைக்கின் பின்புறம் ஒரு வேன் மோதியது. இதில் நிலைதடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனர். அப்போது அந்த வேனின் பின்புற சக்கரம் தேவராஜ் மீது ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் உயிரிழந்தார்.

 பலத்த காயம் அடைந்த பூபதி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சூரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.