கடலூர் தொகுதி: 14-வது சுற்றில் அதிமுக 1 லட்சத்து 26 ஆயிரத்து 530 வாக்குகள் முன்னிலை

கடலூர் தொகுதியில், 14-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 1 லட்சத்து 26 ஆயிரத்து 530 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில்
Updated on
1 min read

கடலூர் தொகுதியில், 14-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன் 1 லட்சத்து 26 ஆயிரத்து 530 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

14-வது சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: ஆ.அருண்மொழித்தேவன்(அதிமுக) 20330, கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ்)960, செந்தில்முருகன்( பகுஜன் சமாஜ்)117, நந்தகோபாலகிருஷ்ணன்(திமுக)11,755 கு.பாலசுப்ரமணியன்(சிபிஐ) 502, சி.ஆர்.ஜெயசங்கர்(தேமுதிக)6961, எ.ஜி.சையத் மொஹிதீன்(ஆம் ஆத்மி) 268.

சுயேட்சை வேட்பாளர்கள்: ஸ்ருதி மிஸ்ரா 53, ச.ஆனந்தராஜன் 36, எஸ்.கிரிஜா 34, தி.சிவஞானசம்பந்தன் 38, ரா.செங்குட்டுவன் 36, திருநாவுக்கரசு 60, பாஸ்கர் 31, ராதாகிருஷ்ணன் 54, ராஜ்குமார் 245, ஜெயசங்கர் 266, நோட்டா 655.

14வது சுற்றில் 42,401 வாக்குகள் எண்ணப்பட்டது.  14 சுற்றுகளிலும் மொத்தம் 6 லட்சத்து 6 ஆயிரத்து 448 வாக்குகள் எண்ணப்பட்டது. 14-வது சுற்று இறுதியில் அதிமுக வேட்பாளர் ஆ.அருண்மொழித்தேவன், திமுக வேட்பாளர் கொ.நந்தகோபாலகிருஷ்ணனைக் காட்டிலும் 1 லட்சத்து 26 ஆயிரத்து 530 வாக்குகள் கூடுதலாக பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com