இந்நிலையில் கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் பகுதியில் இந்த லாரி வந்துக் கொண்டிருந்த போது லாரியின் பின் பக்க டயர் வெடித்ததில் லாரி நிலை தடுமாறி சாலையில் குப்புற கவிழ்ந்தது.இதனால் லாரியின் பின் பக்கம் அமர்ந்து வந்த சிகாமதி கண்ணாடிகளின் இடுபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும் லாரியின் டிரைவர் அறையில் உட்கார்ந்திருந்த சாந்தி, அஞ்சலி,சந்திரமதி, சுசிலா, சரண்யா, அங்கம்மா ஆகியோர் காயமடைந்து பொதுமக்களால் மீட்கப்பட்டனர். இதில் சாந்தி படுகாயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.