/

உளுந்தூர்பேட்டை அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு

உளுந்தூர்பேட்டை வட்டம் பு.கிள்ளனூர் அருகே ஆள் இல்லாத ரயில்வே கேட் அருகில் சுமார் 30 வயது மதிக்கதக்க ரயிலில் அடிப்பட்டு சிதை நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத ஆண்

News image
Updated On :30 மே 2014, 10:18 am

சீனிவாசன்

உளுந்தூர்பேட்டை அருகே ஆள் இல்லாத ரயில்வே கேட்டில் அடையாளம் தெரியதா ஆண் சடலத்தை கைப்பற்றி விருத்தாசலம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டை வட்டம் பு.கிள்ளனூர் அருகே ஆள் இல்லாத ரயில்வே கேட் அருகில் சுமார் 30 வயது மதிக்கதக்க ரயிலில் அடிப்பட்டு சிதை நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை விருத்தாசலம் ரயில்வே போலீஸார் கைப்பற்றி, இறந்தவர் ரயிலில் அடிப்பட்டு இறந்தாரா அல்லது அவரை கொலை செய்து ரயில் பாதையில் யாராவது போட்டுவிட்டு சென்றனரா இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என பல்வேறு கோணங்களில் விருத்தாசலம் ரயில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.