டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஸ்ரீஆண்டாளுக்கு பூச்சக்கர வாகன குடை வழங்கும் விழா

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாளுக்கு ஞாயிற்றுக்கிழமை பூச்சக்கர வாகன குடை வழங்கப்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2014, 9:17 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாளுக்கு ஞாயிற்றுக்கிழமை பூச்சக்கர வாகன குடை வழங்கப்பட்டது.

கோயமுத்தூரைச் சேர்ந்த பாக்கியநாதன் என்பவர் உபயமாக வழங்கியுள்ள இந்தக் குடையை, கோவில் மரியாதையுடன் பக்தர்கள் கொண்டு வந்து தக்கார்

கே.ரவிச்சந்திரனிடம் வழங்கினர். பின்னர் இது ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாருக்கு வைக்கப்பட்டு விசேஷ பூஜைகளை கோயில் ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன் செய்தார். இந்த குடை விசேஷ நாட்களில் வீதி உலாவின் போது, சுவாமிகளுக்கு பின்புறம் வைக்கப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.