ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவர் பசு மாடுகள் வளர்த்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டின் எதிரே மின் வாரியத்தினர் தோண்டிய 8 அடி ஆழமுள்ள குழி மூடப்படாமல் இருந்தது. இதில் இவரது பசு மாடு ஒன்று விழுந்துவிட்டது. சுமார் 2 மணி நேரம் அப் பகுதியில் உள்ளவர்களுடன் இணைந்து மாட்டை மீட்கும் முயற்சியில் முருகன் ஈடுபட்டார். ஆனால் மீட்க முடியவில்லை. இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தரப்பட்டு அவர்கள் வந்து கயிறு கட்டி பசு மாட்டை மீட்டனர்.