அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகரில் நீதிமன்ற வளாகத்தில்நீதித்துறை சேவை மையம்

பொதுமக்கள் வழக்குகள் குறித்த தகவல்களை ஒரே இடத்திலிருந்து அறிந்து கொள்ளும் வகையில் விருதுநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை

Updated On :21 நவம்பர் 2014, 2:52 pm

பொதுமக்கள் வழக்குகள் குறித்த தகவல்களை ஒரே இடத்திலிருந்து அறிந்து கொள்ளும் வகையில் விருதுநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை சேவை மையத்தை தொடங்கி வைக்கப்பட்டது.

    விருதுநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே.எம்-1,ஜே.எம்-2, விரைவு நீதிமன்றம், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் நடந்து வருகிறது. இதற்காக பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் அலைந்து  வருகின்றனர். தற்போது, நீதிமன்றங்களில் நடத்தப்பட்டு வரும் வழக்குகள் குறித்த  விவரங்கள் அனைத்தும் கணினிமைய மாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஒரே இடத்தில் அனைத்து தகவல்களும் கிடைக்கும் வகையில் நீதித்துறை சேவை மைய கணிப்பொறிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தை நீதிமன்ற வளாக கீழ்தளத்தில் மாவட்ட நீதிபதி தாரணி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.  

   இதன் மூலம் பொதுமக்கள் வழக்கு விவரங்களை நீதித்துறை சேவை மையத்தை அணுகி அறிந்து கொள்ளலாம். மேலும், வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும் நாள், வழக்குரைஞர் விவரம் உள்ளிட்டவைகளையும் ஒரு இடத்திலிருந்து அறிந்து கொள்ளும் வகையில் இச்சேவை மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற அலுவலர்கள் தெரிவித்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.