ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை:  கடனாநதி, ராமநதி அணைகள்  2 ஆவது முறையாக நிரம்பியது

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் கடனாநதி, ராமநதி அணைகள் 2 ஆவது முறையாக சனிக்கிழமை நிரம்பியதை அடுத்து உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது. தாமிரவருணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2014, 4:57 am

ஷேக் அப்துல்காதர்

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் கடனாநதி, ராமநதி அணைகள் 2 ஆவது முறையாக சனிக்கிழமை நிரம்பியதை அடுத்து உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டது. தாமிரவருணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குமரி கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்காததால் மாணவர்கள் நிம்மதி அடைந்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் 2 தினங்களாக பெய்து வரும் பலத்த மழையால் கடனாநதி, ராமநதி அணைகள் 2 ஆவது முறையாக சனிக்கிழமை நிரம்பியது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி கடனாநதி அணைக்கு விநாடிக்கு 550 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 140 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. ராமநதி அணையின் நீர்மட்டம் 83.75 அடியாக உயர்ந்து முழுக் கொள்ளளவை எட்டியதும் அணையில் இருந்து உபரி நீர் 100 கனஅடி ஆற்றில் திறக்கப்பட்டது.
இதேபோல் கடனாநதி அணையின் நீர்மட்டம் 83.00 அடியை எட்டியதும் அணையில் இருந்து உபரி நீர் கருணை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இவ்விரு அணைகளிலும் உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டதாலும், நீர்பிடிப்பு பகுதியில் ஆற்றின் கரையோர நகரங்களில் பலத்த மழை பெய்ததாலும் தாமிரவருணி ஆற்றில் 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.