ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பாசனக் குளத்துக்குச் செல்லும் நீரை தடை செய்து சுவர்: நெல்லை அருகே கிராம மக்கள் மறியல்

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே பாசனக் குளத்திற்கு செல்லும் நீரை தடை செய்யும் வகையில் தடுப்புச்சுவர் கட்டியதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து செவ்வாய்க்கிழமை கிராம மக்கள்

News image
Updated On :25 நவம்பர் 2014, 3:18 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே பாசனக் குளத்திற்கு செல்லும் நீரை தடை செய்யும் வகையில் தடுப்புச்சுவர் கட்டியதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மானூர் ஒன்றியம், பிள்ளையார்குளம் ஊராட்சியில் மேலபிள்ளையார்குளம், கீழப்பிள்ளையார்குளம் ஆகிய பாசனக் குளங்கள் உள்ளன. மேலபி்ள்ளையார் குளத்தில் இருந்து கால்வாய் வழியாக கீழபிள்ளையார்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.இதனிடையே 2 ஆண்டுகளுக்கு முன்பு மேலப்பிள்ளையார் குளத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் தண்ணீர் மேட்டுப் பகுதிக்கும் கிடைக்கும் வகையில் அங்கு ரூ. 70 ஆயிரம் மதிப்பில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. எனினும் கால்வாய் வழியாக தொடர்ந்து கீழபிள்ளையார்குளத்துக்கு தண்ணீர் கிடைத்து வந்தது.

கீழபிள்ளையார்குளத்தின் மூலம் கீழபிள்ளையார்குளம், நடுபிள்ளையார்குளம் பகுதியில் 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதனிடையே தடுப்புச் சுவர் கட்டப்பட்ட இடத்தில் கால்வாய் வழியாக செல்லும் நீரை மணல் மூடைகளை வைத்து கீழபிள்ளையார்குளத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் தடை ஏற்படுத்தப்பட்டது.

இதுகுறித்து கீழபிள்ளையார்குளம் பகுதி கிராம மக்கள், விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.இந்நிலையில் செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி மானூர் பிரதான சாலையில் மானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்ட கிராம மக்கள் 500 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அவர்களிடம் திருநெல்வேலி கோட்டாட்சியர் பெர்மிவித்யா, வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தடுப்புச் சுவர் கட்டப்பட்ட பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேல் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.