முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பேரூராட்சி பெண் துணைத் தலைவியை தாக்கியதாக செயல் அலுவலர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி பெண் துணைத் தலைவியைத் தாக்கி, அவமானப்படுத்தியதாக செயல் அலுவலர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட

News image
Updated On :1 அக்டோபர் 2014, 12:05 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பேரூராட்சி பெண் துணைத் தலைவியைத் தாக்கி, அவமானப்படுத்தியதாக செயல் அலுவலர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, எஸ்.கொடிக்குளம் பேரூராட்சி செயல் அலுவலராக இருப்பவர் ம.சேகர் (34). செவ்வாய்கிழமை பேரூராட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது பேரூராட்சி அலுவலகம் வந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த துணைத் தலைவர் பா.முத்துலட்சுமி (37), செயல் அலுவலரிடம் கூட்டம் எத்தனை மணிக்கு என்று கேட்டுள்ளார். மேலும் கட்சி சார்பில் மாவட்ட அளவில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. கூட்டம் நடத்த இவ்வளவு அவசரம் தேவையில்லை என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஆத்திரமுற்ற செயல் அலுவலர் சேகர், அலுவலக கிளார்க் சீனிவாசன், தற்காலிக பணியாளர்கள் ரா.கார்த்திகேயன், பா.முகுந்தன் ஆகியோர் சேர்ந்து துணைத் தலைவர் முத்துலட்சுமியை ஆபாசமாகப் பேசி, சட்டையைப் பிடித்து இழுத்து, கீழே தள்ளி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தட்டிக் கேட்ட அவரது கணவர் பாண்டி (41) யையும் சேகர் தாக்கியுள்ளார். இதில் காயமுற்ற இருவரும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கூமாப்பட்டி காவல் நிலையத்தில் துணைத் தலைவர் முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் செயல் அலுவலர் ம.சேகர், சீனிவாசன், கார்த்திகேயன், முகுந்தன் ஆகியோர் மீது பெண்கள் வன் கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும்  இதற்கு தூண்டுதலாக இருந்ததாக பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி இவரது கணவர் சேதுராமன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.