எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஜெயலலிதா விடுதலைக்காக கோவில்களில் பூஜை

ஜெயலலிதா விடுதலைக்காக வால்பாறை கோவில்களில் அதிமுகவினர் சார்பில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

News image
Updated On :3 அக்டோபர் 2014, 3:37 am

ஏ.மூர்த்தி

ஜெயலலிதா விடுதலைக்காக வால்பாறை கோவில்களில் அதிமுகவினர் சார்பில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

வியாழக்கிழமை வால்பாறை பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையும்,சுப்பிரமணியசுவாமி கோவிலில் அபிஷேக பூஜைகள் மற்றும் தேவாலயங்களில் பிராத்தனைகள் நடத்தப்பட்டது.. வால்பாறை தொகுதி செயலாளர் வி.அமீது தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜைகளில் நகர செயலாளர் மயில்கணேசன், பாசறை இணைச் செயலாளர் சாலவுதீன் அமீது, பேரவை செயலாளர் நரசப்பன், மணிகண்டன், வார்டு உறுப்பினர்கள் தன்ராஜ், நெல்லை உட்பட கட்சியை சேர்ந்த திரளானோர் இதில் பங்கேற்றனர். இதே போல் வால்பாறை பகுதியில் உள்ள பல்வேறு எஸ்டேட்களில் அதிமுகவினர் தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் இனைந்து கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தினார்கள். கடந்த சில தினங்களாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைகளை புறக்கனித்து வருவதால், தேயிலை பறிக்கும் பணியும் பாதிப்படைந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.