இந்த இரு வழக்குகளிலிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளி திண்டுக்கல்லைச் சேர்ந்த மோகன்ராம் (34), சீர்காழியைச் சேர்ந்த சத்யா என்கிற சத்யராஜ் (32), சிதம்பரம் கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த சுரேந்தர் (34) ஆகிய மூவரும் கடலூர் மத்திய சிறைச்சாலையில் உள்ளனர். இவ்வழக்கில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மோகன்ராம், சுரேந்தர் ஆகியோர் சிறைக்குள் இருந்தபடியே சிதம்பரம் இரட்டை கொலை வழக்கில் சதி திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது. சத்யா வெடிகுண்டு வெடித்த வழக்கில், இரட்டை கொலை வழக்கிலும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார். மூவரும் சிறையில் செல்போன்கள் பயன்படுத்தி பல்வேறு சதி திட்டங்கள் தீட்டியதாகக் கூறப்படுகிறது. சிறைக்காவல் நித்யானந்தம் மற்றும் காவலர்களுக்கு மூவரும் மிரட்டில் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் திண்டுக்கல் ரவுடி மோகன்ராம் திருச்சி மத்திய சிறைக்கும், சுரேந்தர் சேலம் மத்திய சிறைக்கும், சீர்காழி சத்யா வேலூர் மத்திய சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.