டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சார்பு ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்து பேருந்தை மறிக்க முயன்ற ம.தி.மு.க. பேச்சாளர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைத்தலைவாசல் தெருவைச் சேர்ந்தவர் நா.ஜெயராமு (53). இவர் ம.தி.மு.க. பேச்சாளராம். ராமகிருஷ்ணாபுரம், காமராஜர் சிலை அருகே வந்த அவர், அ.தி.மு.க.வினர் நடத்திய

News image
Updated On :8 அக்டோபர் 2014, 1:17 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை காவல் சார்பு ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து பேருந்தை மறிக்க முயன்ற ம.தி.மு.க. பேச்சாளரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், கோட்டைத்தலைவாசல் தெருவைச் சேர்ந்தவர் நா.ஜெயராமு (53). இவர் ம.தி.மு.க. பேச்சாளராம். ராமகிருஷ்ணாபுரம், காமராஜர் சிலை அருகே வந்த அவர், அ.தி.மு.க.வினர் நடத்திய உண்ணாவிரதத்தில் பேசியவர்கள் ம.தி.மு.க. பொதுச் செயலாளரைத் தரக்குறைவாக விமர்சனம் செய்ததாகக் கூறி சாலையின் நடுவே சில செய்தித்தாள்களை கிழித்துப்போட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது பணியில் இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் சார்பு ஆய்வாளர் தாமரைவிஷ்ணு, ஜெயராமுவிடம் போக்குவரத்திற்கு இடையூறு செய்யக் கூடாது என்று எவ்வளவோ கூறியும், அவரை பணி செய்யவிடாமல் தடுத்து தொடர்ந்து பிரச்னை செய்து கொண்டே இருந்தார்.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் தாமரை விஷ்ணு புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஜெயராமுவைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.