பழனி ரயில் நிலையத்துக்கு மலைக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பாட்டுக்காக கடந்த 2009ம் ஆண்டிற்கு முன்னதாக மதுரை, பாலக்காடு, ராமேஸ்வரம் பகுதிகளில் இருந்து மீட்டர்கேஜ் பாதையி்ல ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மீட்டர்கேஜ் பாதைகளை அகலரயில் பாதைகளாக மாற்றும் பொருட்டு 2009ம் ஆண்டு மே மாதம் முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பொள்ளாச்சி-திண்டுக்கல் இருப்புப் பாதையை அகலரயில் பாதையாக மாற்றும் பொருட்டு சுமார் ரூ.224 கோடி மதிப்பில் பணிகள் துவங்கப்பட்டது. பணிகள் மிக தாமதமாக நடைபெற்ற நிலையில் மத்திய அரசை எம்.பி.,க்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததன் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக திண்டுக்கல் முதல் பழனி வரையிலான அகலரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டு ரயில்கள் இயக்கப்பட்டது. தற்போது பழனியில் இருந்து திண்டுக்கல், சென்னை, திருச்செந்தூர் வரை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.