சிதம்பரம் மேலரதவீதியில் தீபாவளி பண்டிகை மறுதினமான வியாழக்கிழமை தீபாவளி நோன்பு கொண்டாடுவதற்காக மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு உள்ளிட்ட பொருள்கள் வாங்க மக்கள் திரண்டனர்.
சிதம்பரத்தில் வியாழக்கிழமை காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது. பின்னர் சற்று மழை விட்டு லேசாக தூரல் மட்டும் போட்டது. மேலரதவீதியில் தீபாவளி நோன்பு பண்டிகைக்கு படைப்பதற்காக மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, காவாளை கருகமணி, கையில் கட்டும் கயிறு, கொட்டைப்பாக்கு உள்ளிட்ட பொருள்கள் கொண்ட ஒரு செட் ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. மழையினை பொருட்படுத்தாமல் மேற்கண்ட நோன்பு பொருள்களை வாங்க மேலரதவீதியில் பொதுமக்கள் வியாழக்கிழமை திரண்டனர். இதனால் மேலரதவீதியில் போலீஸாரால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்று வழியில் விடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.