சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோட்டம்: நீண்ட தேடுதலுக்கு பின் பிடிபட்டார்

கோவை மத்திய சிறையிலிருந்து மேட்டுப்பாளையம் நீதிமன்றத்திற்கு செவ்வாய்கிழமை விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர் பெரியநாயக்கன்பாளையம் அருகே தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On :5 ஜனவரி 2024, 12:38 pm IST

கோவை மத்திய சிறையிலிருந்து மேட்டுப்பாளையம் நீதிமன்றத்திற்கு செவ்வாய்கிழமை விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர் பெரியநாயக்கன்பாளையம் அருகே தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள ரங்கம்மாள் காலனியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத்.இவரது மகன்  முபாரக் அலி(22).பல்வேறு திருட்டுகளில் சம்பந்தப்பட்ட இவர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அன்னூரில் நடந்த திருட்டு வழக்கு சம்பந்தமாக மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்த வேண்டியிருந்தது.

இதனையடுத்து சிறப்பு சார் ஆய்வாளர் நசீர் தலைமையிலான போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு இரவு 9 மணியளவில் மீண்டும் அவரை மத்திய சிறையில் அடைப்பதற்காக கோவைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர்.பெரியநாயக்கன்பாளையம் அருகே வரும் போது கேஸ் கம்பெனி பஸ் ஸ்டாப்பில் உள்ள டீக் கடை முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு டீ குடித்துள்ளனர்,அப்போது முபாரக் அலி தப்பி ஓடிவிட்டான்.இதனால் அதிர்ச்சியுற்ற போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அருகிலுள்ள பெ.நா.பாளையம்,துடியலூர்,கோவில்பாளையம் மற்றும் கோவை மாநகர காவல்நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.அனைத்து போலீசாரும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.இந்நிலையில் என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியில் அவர் மறைந்திருந்தது தெரியவந்தது.அங்கு சென்ற துடியலூர் போலீசார் அவனை பிடித்தனர்.கைதி தப்பி சென்ற சம்பவம் போலீசாரிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.