விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோட்டம்: நீண்ட தேடுதலுக்கு பின் பிடிபட்டார்
கோவை மத்திய சிறையிலிருந்து மேட்டுப்பாளையம் நீதிமன்றத்திற்கு செவ்வாய்கிழமை விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர் பெரியநாயக்கன்பாளையம் அருகே தப்பி ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.








