இன்று காலை கோபூஜை, அங்குரார்ப்பணம், மூலவர் கலாகர்ஷணம் நடத்தப்பட்டு மாலையில் முதல்கால பூஜை துவங்குகிறது. வெள்ளிக்கிழமை இரண்டாம்கால பூஜையும், மூன்றாம் காலபூஜையும், சனிக்கிழமை நான்காம்கால பூஜையும் நடத்தப்படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 6.40 மணியளவில் அருள்மிகு குழந்தைவேலாயுதசாமி, அருள்மிகு வேலீஸ்வரர் விமானம், இராஜகோபுர விமானங்களுக்கு சமகாலங்களில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. பூஜைகளை தவராஜபண்டிதர்(பொறுப்பு) அமிர்தலிங்க குருக்கள், தேவஸ்தான ஸ்தானீகர் செல்வசுப்ரமண்ய குருக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.