இதனையடுத்து உடல்கள் வைக்கப்பட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனை முன்பு குற்றவாளிகளையும், கொலைக்கு பின்புலமாக செயல்படுவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊர்வலமாக உதவிஆட்சியர் அலுவலத்திற்கு சென்று இச்சம்பவத்திற்கு காவல்துறையின் மெத்தனப்போக்குதான் காரணம் என்றும், எனவே காவல்துறையினர் மீது துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை மனு அளித்து, கோரிக்கைகள் நிறைவேறும் வரை உடலை பெற மாட்டோம் எனக்கூறி கலைந்து சென்றனர்.