மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சிதம்பரம் அருகே வெள்ளாற்றங்கரையில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு காயங்களுடன் ஆண் சடலம்

சிதம்பரம் அருகே தீத்தாம்பாளையம் பாலத்தின் அருகே யூனூஸ்நகர் எனுமிடத்தில் வெள்ளாற்றங் கரையோரம் புதன்கிழமை காலை உடலில் காயங்களுடன் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் 55 வயது மதிக்கத்தக்க

News image
Updated On :3 செப்டம்பர் 2014, 11:13 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே வெள்ளாற்றங்கரையில் உடலில் காயங்களுடன் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகே தீத்தாம்பாளையம் பாலத்தின் அருகே யூனூஸ்நகர் எனுமிடத்தில் வெள்ளாற்றங் கரையோரம் புதன்கிழமை காலை உடலில் காயங்களுடன் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. உடலுடன் நீண்ட கயிறு கட்டப்பட்டுள்ளது. கொலை செய்து உடலில் கயிற்றை கட்டி பாலத்திலிருந்து ஆற்றில் தூக்கிப் போட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இறந்தவர் பச்சை கலர் கால்சட்டையும், வெள்ளை பணியனும் அணிந்துள்ளார்.

இறந்து போனவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கிள்ளை போலீஸார் சந்தேகமரணம் என வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.