பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை அடுத்து மறுதேதி அறிவிப்பு வரை மூடப்பட்டிருந்த பிஇ முதாலாம் ஆண்டு வகுப்புகள், பிஎஸ்சி வேளாண்மை முதலாம் ஆண்டு வகுப்புகள் கடந்த ஆக.22-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டது. பின்னர் பல்கலைக்கழக கலை (Faculty of Arts), அறிவியல் (Faculty of Sciences), கல்வியியல் (Faculty of Education), கடல் அறிவியல் (Faculty of Marine Science) மற்றும் இசைத்துறை (Dept of Music), இந்திய மொழிப்புலம் (Faculty of Indian Languages) அனைத்து பிரிவுகளின், அனைத்து வகுப்புகளும் கடந்த ஆக.27-ம் தேதி முதல் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.