மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

சிதம்பரம் அருகே மதுபானக்கடை பூட்டை உடைத்து திருட முயற்சி! பணம் இல்லாததால் கடைக்கு தீ வைப்பு

சிதம்பரம் அருகே மஞ்சக்கொல்லை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக மோகன் என்பவரும், விற்பனையாளராக அந்தோணிசாமி என்பவரும்

News image
Updated On :6 செப்டம்பர் 2014, 2:47 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே அரசு டாஸ்மாக் மதுபானக்கடை பூட்டை உடைத்து மர்மநபர்கள் திருட முயன்றனர், அப்போது அங்கு பணம் இல்லாததால், ஆத்திரமடைந்த அக்கும்பல் தீ வைத்துவிட்டு தலைமறைவாயினர். இதில் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் சேதமுற்றன.

சிதம்பரம் அருகே மஞ்சக்கொல்லை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக மோகன் என்பவரும், விற்பனையாளராக அந்தோணிசாமி என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இருவரும் வெள்ளிக்கிழமை இரவு கணக்கை முடித்து விற்பனைத் தொகை 53,690 தொகையை எடுத்துக் கொண்டு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில் நள்ளிரவு மர்மகும்பல் ஒன்று கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, பணம் வைக்கப்படும் லாக்கரை உடைத்தனர். அதில் பணம் இல்லாததால், ஆத்திரமடைந்த மர்மகும்பல் தீ வைத்துவிட்டு தலைமறைவானது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் தீயை அணைத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் கடையிலிருந்த குளிர்சாதனப் பெட்டி, வரவு-செலவு கணக்கு புத்தகம் மற்றும் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் சேதமுற்றன. தகவல் அறிந்த ஏடிஎஸ்பி வெங்கடாஜலபதி, டாஸ்மாக் வட்ட உதவி மேலாளர் விஜயக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து புகாரின் பேரில் மருதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூரிலிருந்து மோப்ப நாய் அர்ஜூன் மற்றும் கைரேகை நபர்கள் வரவழைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.